உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ராயப்பன்பட்டியில் நாளை பனிமய மாதா சர்ச் தேரோட்டம் 7 டன் எடையிலான மரத்தேர் பவனி

ராயப்பன்பட்டியில் நாளை பனிமய மாதா சர்ச் தேரோட்டம் 7 டன் எடையிலான மரத்தேர் பவனி

உத்தமபாளையம்: ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச் தேரோட்டம் நாளை ( ஆக். 17 ) மாலை நடைபெறுகிறது. 123 ஆண்டுகளில் முதன் முறையாக மரத்திலான 7 டன் எடையிலான மரத்தேர் புதிதாக செய்து தேரோட்டம் நடைபெற உள்ளது.ராயப்பன்பட்டி பனிமய மாதா சர்ச் மிக பழமையானதும், பிரசித்தி பெற்றது. இந்த சர்க் 1902 ல் கட்டப்பட்டது. சர்ச்சில் உள்ள வெண்கல மணி ஆயிரம் கிலோ எடை கொண்டது. பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பனிமய மாதா சர்ச்சுகளில் ஆகஸ்ட் மாதம் அன்னை தேர்ப்பவனி நடைபெறும்.தமிழகத்தில் தூத்துக்குடி பனிமய மாதா சர்ச் தேர்ப்பவனி மரத்திலான தேரில் நடைபெறுகிறது. மற்ற ஊர்களில் சப்பரத்திலல் டிராக்டரில் நடைபெறும். ராயப்பன் பட்டியில் இதுவரை மாதா ஊர்வலம் சப்பரத்தில் வைத்து டிராக்டர் மூலம் நடைபெற்று வந்தது.தற்போது ரூ.40 லட்சம் செலவில் 29 அடி உயரத்தில் 7 டன் எடையுள்ள மரத்திலான தேர் புதிதாக செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெள்ளோட்டம் நடந்தது. தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் ஆக. 9 ல் நடைபெற்றது. பனிமய மாதா தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் கமிட்டி நிர்வாகிகள், ஊர்ப் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பனிமயமாத திருந்தேர்ப் பவனியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி துவக்கி வைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை