உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுற்றுலா வந்த சிறுவன் பலி

சுற்றுலா வந்த சிறுவன் பலி

மூணாறு: மத்தியபிரதேசத்தை சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர் கேரளமாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர்.இவர்கள் சித்திராபுரத்தில் தனியார் விடுதியில் தங்கினர். 9 வயது சிறுவன் பிராக்ய பலால் விடுதியின் ஆறாவது மாடியில் அறையில் பெற்றோருடன் தங்கினார். நேற்று முன்தினம் இரவு நாற்காலி மீதுஏறி ஜன்னலை திறக்க முயன்ற சிறுவன் , எதிர்பாராத வகையில் அதன் வழியாக கீழே விழுந்தான். பலத்த காயமடைந்த பிராக்ய பலால், அங்கமாலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தான். இயற்கைக்கு மாறான மரணம் என வெள்ளத்துாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை