மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி மாற்றுத்திறனாளி பலி
24-Aug-2025
வாகனம் மோதி இளைஞர் பலி
29-Aug-2025
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி கிழக்கு தெரு விஜயன் 40. அந்தப்பகுதி சாவடியில் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபாண்டி, இவரது நண்பர்கள் மாதேஷ், நாகபாண்டி, சந்தோஷ், அஜீத், சஞ்சய் ஆகியோர் அவதூறாக பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது விஜயன் ஏன் அவதூறாக பேசுகிறீர்கள் என்றார்.. அங்கு குடியிருப்பவர்களும் சத்தமிடவே 5 பேரும். அங்கிருந்து சென்றனர். இந்நிலையில் வீட்டின் அருகே நின்றிருந்த விஜயனை, முன் விரோதம் காரணமாக கிருஷ்ணபாண்டி குனறஐ நண்பர்கள் கம்பு, கையால் தாக்கினர். சண்டையை விலக்கி விட வந்த விஜயன் மனைவி வாணியை 37. கிருஷ்ணபாண்டி அவதூறாக பேசி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார். விஜயன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வாணி புகாரில், ஜெயமங்கலம் போலீசார் கிருஷ்ணபாண்டி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். --
24-Aug-2025
29-Aug-2025