உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி

புலியிடம் சிக்கி நான்கு பசுக்கள் பலி

மூணாறு, : மூணாறு அருகே குண்டளை சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் காலனியைச் சேர்ந்த சண்முகத்தின் நான்கு பசுக்கள் புலியிடம் சிக்கி பலியான நிலையில் ஒரு பசு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி வருகிறது.அவருடைய 5 பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடினர். அவற்றில் 4 பசுக்கள் குண்டளை புதுக்கடி பகுதியில் இறந்து கிடந்ததை நேற்று பார்த்தனர். அவை 2 முதல் 4 வயதுடைய பசுக்களாகும். அவற்றின் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்ததால் புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை வனத்துறையினரும் உறுதி செய்தனர். ஐந்தாவது பசுவை தேடியபோது அருகில் உள்ள காட்டில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தது. ஒரே நாளில் 5 பசுக்கள் புலியிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை