பயன்பாட்டிற்கு வராத விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம்
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விபத்து அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முடங்கியுள்ளது. உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.4 கோடியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்கு புதிய கட்டடம் 2 ஆண்டுகளாக கட்டுமான பணி நடந்தது. தரைத்தளம் இல்லாமல் 2 மாடிகளை கொண்ட இந்த புதிய கட்டடம் கட்டி முடித்து காட்சி பொருளாக உள்ளது. திறப்பு விழா நடத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள 72 படுக்கைகளுடன் , புதிய கட்டடத்திற்கு 32 படுக்கை வசதியும் கேட்கப்பட்டுள்ளது . இங்கு 100 படுக்கை வசதிகள் கிடைத்தால் கூடுதல் டாக்டர் பணியிடங்கள் கிடைக்கும். விரைவாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். இது குறித்து மருத்துவ அலுவலர் ஜின்னாவிடம் கேட்டதற்கு , ''அது சம்பந்தமாக நீங்கள் தான் இணை இயக்குநரிடம் கேட்க வேண்டும். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்