உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

 வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக கால்வாய் வழியாகவும், ஆற்றின் வழியாகவும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் வெளியேறியது. இந்நிலையில் டிசம்பர் 25ல் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இரு நாட்களுக்குப் பின் நேற்று காலை 9:00 மணிக்கு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1050 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் செல்கிறது. நேற்று அணை நீர்மட்டம் 55.24 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 621 கன அடி. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1119 கன அடி நீர் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை