உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருநெல்வேலியில் போராட்டத்திற்குப்பிறகு அயோத்தி விழா திரையிட அனுமதி

திருநெல்வேலியில் போராட்டத்திற்குப்பிறகு அயோத்தி விழா திரையிட அனுமதி

திருநெல்வேலி : திருநெல்வேலியில் தனியார் திருமண மண்டபத்தில் அயோத்திர ராமர் கோயில் கும்பாபிேஷக நிகழ்வை திரையிட போலீசார் அனுமதி மறுத்ததால் ஹிந்து இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து திரையிட அனுமதியளிக்கப்பட்டது.திருநெல்வேலி கோபாலசாமி கோயில் அருகில் தனியார் மண்டபத்தில் நேற்று காலை அயோத்தி ராமர் கோயில் கும்பாபிேஷக நிகழ்வை திரையிட ஏற்பாடுகள் செய்திருந்தனர். போலீசார் அங்கிருந்தவர்களை வெளியேற்றி மண்டபத்திற்கு பூட்டு போட்டு அனுமதி மறுத்தனர்.இதை கண்டித்து பா.ஜ., ஹிந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அயோத்தி கும்பாபிேஷக நிகழ்வை தனியார் மண்டபங்களில் திரையிட அனுமதி போலீஸ் அனுமதி தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து போலீசார் அனுமதி அளித்தனர். அதையடுத்து காலை 11:00 மணி முதல் தனியார் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் அயோத்தி கோயில் கும்பாபிேஷகம் நிகழ்வு திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை