உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  கார் கம்பெனிமேலாளரை தாக்கி பொருட்களை சூறையாடியவர் கைது

 கார் கம்பெனிமேலாளரை தாக்கி பொருட்களை சூறையாடியவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பழைய கார் கம்பெனிக்குள் புகுந்து மேலாளர் உள்ளிட்டவர்களை தாக்கியதோடு பொருட்களை சூறையாடிய இன்னொரு கம்பெனி உரிமையாளர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் சுசி பயன்படுத்திய கார் விற்பனை நிறுவனம் உள்ளது. திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் சேவியர் காலனி அருகே பழைய கார் விற்பனை நிறுவனம் நடத்தி வரும் ராபின்சன் 41 என்பவர், சுசி கம் பெனிக்குள் புகுந்து அங்கிருந்த மேலாளர் சுப்ர மணியன், ஊழியர்களை தாக்கியதோடு பேன், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை தரையில் போட்டு சூறையாடினார். கார்களையும் சேதப்படுத்தினார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சுப்ர மணியன் புகாரின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீசார் ராபின்சனை கைது செய்தனர். அவருடன் வந்த மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்