உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி மீது கார் மோதி விபத்து; மாணவர்கள் 5 பேர் பலி

லாரி மீது கார் மோதி விபத்து; மாணவர்கள் 5 பேர் பலி

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே லாரி மீது கார் மோதியதில், கல்லுாரி மாணவர்கள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இரு மாணவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்திஷ் வர்மா, 21, சேத்தன், 21, ராம்கோமன், 21, யுகேஷ், 21, நித்திஷ், 21, சைதன்யா, 21, விஷ்ணு, 21. இவர்கள் சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தனர்.கடந்த 9ம் தேதி, ஏழு பேரும் ஆந்திராவில் உள்ள கோவிலுக்கு சென்றனர். நேற்று மாலை மீண்டும் கல்லுாரிக்கு, மாருதி எர்டிகா காரில் திரும்பினர். அவர்கள் பயணித்த கார், திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த ராமஞ்சேரி அருகே வந்த போது, சென்னையில் இருந்து ராஜஸ்தான் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில், ஐந்து மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சைதன்யாவும், விஷ்ணுவும் படுகாயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தகவல் அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர். இந்த விபத்தால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி