உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேலையில் தீப்பிடித்து பெண் பலி

சேலையில் தீப்பிடித்து பெண் பலி

ஊத்துக்கோட்டை: பென்னலுார்பேட்டை அருகே, சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிரிஜா, 52. கடந்த, 28 ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தபோது, திடீரென சேலையில் தீப்பிடித்தது. பலத்த தீக்காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று உயிரிந்தார். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ