| ADDED : ஆக 03, 2024 09:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு, வங்கி கடன் இணைப்பு வழங்குவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தகுதி அடிப்படையில், வங்கி கடன் வழங்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வங்கியாளர் மற்றும் வட்டார மேலாளர்கள், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் சண்முகவள்ளி, முன்னோடி வங்கி மேலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.