உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசிடம் பணமில்லை என்றால் ஆணை ஏன் வழங்கப்படுகிறது:ஆதவற்ற விதவை ஆதங்கம்

அரசிடம் பணமில்லை என்றால் ஆணை ஏன் வழங்கப்படுகிறது:ஆதவற்ற விதவை ஆதங்கம்

திருவாலங்காடு:முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டு 10 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை பணம் கிடைக்காமல் தவிப்பதாக முதியோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் , மணவூர், பூனிமாங்காடு வருவாய் குறுவட்ட எல்லைக்கு உட்பட்ட பழையனூர், சின்னம்மாபேட்டை, கவேரிராஜபுரம் உட்பட 50 கிராமங்களில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த 10 மாதத்திற்கு முன் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை திருத்தணி தனி வட்டாட்சியரால் வழங்கப்பட்டு உள்ளது.ஆனால் இதுவரை அவர்களுக்கு பணம் சென்று சேரவில்லை இதனால் அவர்கள் உணவு, மருந்து வாங்க கூட வழியின்றி அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆதவற்ற விதவை, மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை கிடைக்காமல் செய்வதறியாமல் உள்ளனர்.இதுகுறித்து திருவாலங்காடை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது:ஆதரவற்ற விதவையான நான் 10 மாதங்களுக்கு முன் அரசு உதவித்தொகைக்கான ஆணை பெற்றேன். இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு மூன்று வேளை உணவுக்கு வழியின்றி சிரமப்படுகிறேன். தாலுகா அலுவலகம் சென்று கேட்டால் அரசு கஜானாவில் பணம் இல்லைவரும்போது தெரிவிக்கப்படும் என்கின்றனர். அரசிடம் பணம் இல்லை என்றால் ஆணை ஏன் வழங்கப்படுகிறது. முதல்வர் இதுகுறித்து தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்