| ADDED : ஆக 16, 2024 12:17 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் தாமரை ஏரி, பொதுப்பணி துறையின் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. நகரின் ஒரே நீராதாரம் தற்போது குப்பை மற்றும் கழிவுநீரின் குட்டையாக மாறி வருகிறது.தாமரை ஏரியின் வடக்கு திசையில், பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அருண் நகர் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், ஊராட்சி நிர்வாகம் முறையாக குப்பையை சேகரிக்காததால், அருகில் உள்ள தாமரை ஏரியில் கழிவுகளை குவித்து வருகின்றனர். இதனால், இப்பகுதியின் சுகாதாரம் கடுமையாக பாதிப்பட்டுள்ளது.மேலும், ஏரி நீர் மாசு அடைந்ததுடன், அதன் கீழ் உள்ள மற்ற ஏரிகளும் மாசடையும் நிலை உருவாகியுள்ளது. தாமரை ஏரியை சுற்றி குடியிருப்பு பகுதி இருப்பதால், கழிவுநீர் மற்றும் கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும்.எனவே, நீர்வளத் துறையினரும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆவர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.