உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓடும் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஓடும் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:துாத்துக்குடியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி உப்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று காலை சென்றது. சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி நுழையும் போது, லாரியின் டிரைவர் கேபினில் புகை வெளியேறியது.ஆந்திர மாநிலம் காவேரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த லாரியின் ஓட்டுனர் சாமி, 48, சுதாரித்து கொண்டு, லாரியை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார்.சிறிது நேரத்தில் லாரியின் கேபின் தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். லாரியின் முன்பக்கம் எரிந்தது. ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை