உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை

பயணியர் நிழற்குடை அமைக்க சிறுவாபுரி பக்தர்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.சென்னையில் இருந்து சிறுவாபுரிக்கு வரும் பக்தர்கள், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுரோடு சந்திப்பில், இடது புறம் பிரியும் சாலையில், 3 கிலோமீட்டர் துாரம் பயணிக்க வேண்டும்.செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில், சிறுவாபுரியில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலை கருதி, கார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புதுரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து, மினி பேருந்து வாயிலாக சிறுவாபுரி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர்.புதுரோடு சந்திப்பில் பேருந்து நிழற்குடை இல்லாததால், மழையிலும் வெயிலிலும், மினி பேருந்துக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சிறுவாபுரி பக்தர்களின் நலன் கருதி, புதுரோடு சந்திப்பில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ