| ADDED : ஆக 13, 2024 09:07 PM
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்த முதுகூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, 58.இவருக்கு புவனேஸ்வரி, 56 என்ற மனைவி, மகன், மகள்உள்ளனர்.நசரத்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி பழனி, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கரவாகனத்தில் மனைவியுடன் பூந்தமல்லி சென்று விட்டு பொருட்கள் வாங்கி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சின்ன வளர்புரம் பகுதியில் வந்தபோது இரு சக்கர வாகனம் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் தலையில் படுகாயமடைந்து தண்டலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழனி நேற்று முன்தினம் இறந்தார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்துவிசாரித்து வருகின்றனர்.