உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வீரஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

 வீரஆஞ்சநேயர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்

திருத்தணி: திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், 108 பால்குட ஊர்வலம் நடந்தது. திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் நேற்று, கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணிக்கு பெரிய தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு, காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயர் கோவில் வளாகத்திற்கு வந்தது. பின், மூலவருக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ