| ADDED : டிச 08, 2025 06:31 AM
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆயிரக் கணக்கான பக்தர்கள் பொது வழியில் இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். மூலவரை தரிசிக்க, பொது வழியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத்தேரில் இரவு 7:00 மணிக்கு எழுந்தருளி தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.