உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி விழா 15ல் கொடியேற்றம்

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி உத்திர விழா, இன்று, காலை, 10:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டு, வரும் 15 காலை 9;00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது.இதை தொடர்ந்து, 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில், வீதியுலா வந்து அருள்பாலிப்பார்.விழாவின், 7ம் நாளான மார்ச் 21ம் தேதி கமலத்தேர் விழா நடக்கிறது.இதையடுத்து, மார்ச் 22ம் தேதி இரவு: 9:00 மணிக்கு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறும். 24ம் தேதி காலை 7:00 மணிக்கு நடராஜர் வீதியுலாவும், இரவு, 8:00 மணிக்கு சென்றாடு தீர்த்த குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி