உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்

ஷேர் ஆட்டோவில் குட்கா கடத்தல்

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஷேர் ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். குளிர்பானங்களுக்கு இடையே பதுக்கி எடுத்துச் சென்ற, 250 கிலோ குட்கா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடத்திய, மாதர்பாக்கம் அடுத்த பூதுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், 39, என்பவரை கைது செய்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை