| ADDED : ஜன 18, 2024 10:01 PM
திருமழிசை:திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம், இன்று துவங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள 'பக்திஸார்' எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மகோற்சவம், கடந்த 5ம் தேதி காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.இன்று காலை 7:30 மணி முதல் 8:30 மணிக்குள் ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள், ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ விழாவில், காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நாள் காலம் நிகழ்ச்சி
ஜன., 19 காலை தங்க பல்லக்கு மாலை சிம்ம வாகனம்20 காலை பெரிய மங்களகிரி மாலை யாளிவாகனம்21 காலை சூரிய பிரபை மாலை சந்திர பிரபை22 காலை பல்லக்கு மாலை விமானம்23 காலை பல்லக்கு மாலை கருடசேவை - ஜெகந்நாத பெருமாள் ஹம்ச வாகனம் - திருமழிசை ஆழ்வார்24 காலை சேஷ வாகனம் - ஜெகந்நாத பெருமாள் தங்க தோளுக்கினியான் - ஆழ்வார் மாலை குதிரை வாகனம்25 காலை - சூர்ணாபிஷேகம், மாலை - தங்க தோளிக்கினியான்26 காலை ஏழூர் புறப்பாடு - நாச்சியார் திருக்கோலம் பகல் திருமஞ்சனம் இரவு யானை வாகனம்27 காலை திருத்தேர் மாலை தோட்ட உற்சவம்28 காலை சாற்றுமுறை உற்சவம், கந்த பொடி உற்சவம் மாலை திருச்சந்த விருத்த சாற்றுமுறை, தோட்ட உற்சவம் இரவு பெரிய மங்களகிரி29 மாலை விடையாற்றி உற்சவம் - முதல் நாள்30 மாலை விடையாற்றி உற்சவம் - இரண்டாம் நாள்31 மாலை விடையாற்றி சாற்றுமுறை