இலவச வீட்டு மனை அளவீடு செய்து கொடுக்க மனு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை வட்டம், மெய்யூர் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலைக்கு செல்வது.கடந்த 2000ம் ஆண்டு, ஜனவரி மாதம், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 183 பேருக்கு தலா, மூன்று சென்ட் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் கால் நுாற்றாண்டு கடந்த நிலையில் இதுவரை நிலம் அளவீடு செய்து கொடுக்கவில்லை.இதுகுறித்து கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது ஊத்துக்கோட்டையில் புதிதாக பொறுப்பேற்ற தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாசிடம் வீட்டு மனையை அளவீடு செய்து கொடுக்க வேண்டி மனு கொடுத்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.