உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையில் பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்

பாண்டூர்:பூண்டி ஒன்றியம் பட்டரைப்பெரும்புதுார் ஊராட்சி வரதாபுரம் ராமர் கோவில் தெருவில் சிமென்ட் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சிமென்ட் சாலையில் கழிவுநீர் சாலையின் குறுக்கே செல்ல சாலையின் கீழ் உருளை அமைக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இந்த சிமென்ட் சாலை சேதமடைந்து தற்போது உருளை உடைந்து சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலை தற்போது கல் ஒன்று போடப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிபடுமோ என அச்சமடைந்துள்ளனர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை