உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  பைக் மோதி விபத்து மாணவன் படுகாயம்

 பைக் மோதி விபத்து மாணவன் படுகாயம்

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே பைக் மோதி, அரசு பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தார். கடம்பத்துார் அடுத்த செஞ்சியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் சக்திவேல், 13. இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 19ம் தேதி சிற்றம்பாக்கம் சாலையில் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த 'பேஷன் புரோ' பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, நேற்று முன்தினம் அளித்த புகாரின்படி, கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை