உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு

துாத்துக்குடி,:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை. அவரது மகன்களான ஆனந்த பத்மநாபன், ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன், அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, 16வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும், வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞரும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. ஜூன் 19ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஐயப்பன் ஒத்திவைத்தார். அன்றையதினம், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்