உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 24 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

24 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளிய நோட்டா

துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தி.மு.க., - அ.தி.மு.க., - த.மா.கா, உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பிலும், சுயேச்சையாகவும் 28 பேர் போட்டியிட்டனர். தி.மு.க., வேட்பாளர் கனிமொழி 5,40,729 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற, 27 பேரும் டிபாசிட் இழந்தனர்.அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணியில்இடம்பெற்ற த.மா.கா,வேட்பாளர் விஜயசீலன்1,22,380 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சிவேட்பாளர் ரொவீனா ரூத் ஜேன் 1,20,300 ஓட்டுகளும் பெற்றனர். 9806 ஓட்டுகள் பெற்று ஐந்தாவது இடத்தை நோட்டா பிடித்தது.பகுஜன் ஜமாஜ், மக்கள்நல்வாழ்வு கட்சி, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம், புதிய மக்கள் தமிழ் தேசம் கட்சி, நாம் இந்தியர் கட்சி மற்றும் சுயேச்சையாக போட்டியிட்ட 19 வேட்பாளர்களையும்விடநோட்டாவுக்கு அதிகஓட்டுகள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை