உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

வேன் மோதி பாதயாத்திரை பக்தர் பலி

தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம் நல்லமருதம்பட்டியை சேர்ந்த செந்தில் வேல் 40, ராமமூர்த்தி 43, ஆகியோர் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். மதுரை -- -துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வாலசமுத்திரம் அருகே பின்னால் வந்த வேன் இருவர் மீதும் மோதியதில் பலத்த காயமடைந்தனர். இதில் செந்தில்வேல் இறந்தார். ராமமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். வேன் டிரைவர் வேப்பலோடை அரிச்சந்திரனை, ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி