உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

தீயணைப்பு வாகனத்தில் நீரின்றி 3 ஏக்கர் கரும்பு எரிந்து நாசம்

திருப்பத்துார் : திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் கல்லரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி காதர்பாஷா, 46. இவர், தன் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார்.அறுவடைக்கு தயாரான நிலையில், கரும்பு தோட்டம் நேற்று திடீரென தீப்பிடித்தது. ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், அவர்கள், ஒரு மணி நேரம் தாமதமாகவே சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர், தீயை அணைக்க முயன்ற போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாதது தெரியவந்தது. பின், வாகனத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வருவதற்குள், தீ மளமளவென பரவி, 3 ஏக்கர் கரும்பு தோட்டம் முழுதும் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறை ஊழியர்களின் இந்த அலட்சிய போக்கால், காதர்பாஷா குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை