உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தரமற்ற கட்டுமானம் கரையும் தடுப்பணை

தரமற்ற கட்டுமானம் கரையும் தடுப்பணை

பொங்கலுார்:பொங்கலுார் ஒன்றியம், கண்டியன்கோவில் ஊராட்சி பெரியாரியபட்டியில் கடந்த 2018--19ம் நிதியாண்டில் தடுப்பணை கட்டப்பட்டது.இது, 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. மழை பெய்யும்போதெல்லாம் தடுப்பணை கரைந்து கொண்டே வருகிறது. விரைவில் அது இடிந்து விழுந்து விடும். பல லட்சம் ரூபாய் இதற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டதா, வெறும் மணலால் கட்டினார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர், பொதுமக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ