உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குற்ற வழக்குகளில் தொடர்பு ; வாலிபர் மீது குண்டாஸ்

குற்ற வழக்குகளில் தொடர்பு ; வாலிபர் மீது குண்டாஸ்

திருப்பூர்;காங்கயத்தில் மார்ச் 6ம் தேதி ரோட்டில் நடந்து சென்ற நபரிடம், கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல் போன் பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக, காங்கயம் போலீசார் நாகப்பட்டினத்தை சேர்ந்த யுவராஜ், 31 என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்த நிலையில், அவரை குண்டாசில் கைது செய்ய, திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ