உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 51வது இந்தியா நிட்பேர் கண்காட்சி

51வது இந்தியா நிட்பேர் கண்காட்சி

திருப்பூர் : வசந்தம் மற்றும் கோடைக்கால நவீன ஆடை ரகங்களுடன், 51வது இந்தியா நிட்பேர் கண்காட்சி, வரும் செப்., 4ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில், ஆண்டுக்கு இரண்டு முறை, 'இந்தியா இன்டர்நேஷனல் நிட்பேர்' கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, குளிர்கால ஆடைகள் மற்றும் 'பேப்ரிக்' ரகங்கள் அணிவகுக்கும் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.சர்வதேச அளவிலான எதிர்பார்ப்புகள், ஆயத்த ஆடை வடிவமைப்பில் புதிய தொழில்நுட்பம், செயற்கை நுாலிழை ஆடைகள் உற்பத்தி, மதிப்பு கூட்டிய ஆடைகள் உற்பத்தி என, ஒவ்வொரு கண்காட்சியும், முற்றிலும் மாறுபட்ட வகையில் நடக்கிறது. கண்காட்சியில் பங்கேற்கும், வெளிநாட்டு வர்த்தகர்கள் மூலமாக, திருப்பூருக்கு புதிய ஆர்டர்கள் ஈர்க்கப்படுகின்றன.திருமுருகன்பூண்டி ஐ.கே.எப்., வளாகத்தில், வரும் செப்., 4ல் துவங்கி, மூன்று நாட்களுக்கு, 51வது 'இந்தியா நிட்பேர்' கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், கோடைகால மற்றும் வசந்தகால ஆயத்த ஆடை உற்பத்தி தொழில்நுட்ப கருத்தரங்கு, புதிய ரக ஆடைகளை காட்சிப்படுத்தும் 'பேஷன் ேஷா' நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.கடந்தாண்டு நடந்த, 49 வது 'இந்தியா நிட்பேர்' கண்காட்சி, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் திருப்புமுனையாக அமைந்தது. கொரோனாவுக்கு பிறகு, சீனாவுக்கான ஆர்டர்கள், இந்தியாவின் பக்கம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது.அந்தவகையில், இதுபோன்ற கண்காட்சிகள் மூலமாக, திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை சாதனைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கடந்த, 50வது கண்காட்சியிலும், பசுமை சார் ஆடைகள், கண்காட்சியில் அதிகம் பங்குவகித்தன.திருப்பூரில் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி அம்சங்களை விளக்கி, மீண்டும் வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தகர்களை கவர்ந்திழுக்கும் வகையில், 51வது கண்காட்சியை சிறப்புடன் நடந்த, கண்காட்சி ஏற்பாட்டு குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி