உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 

மே தினத்தில் செயல்பட்ட 77 நிறுவனம் மீது நடவடிக்கை 

திருப்பூர் : தொழிலாளர் நலத்துறையின் விதிமுறைகளில் மீறி, தேசிய விடுமுறை நாளில் செயல்பட்ட, 77 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மே தின நாளில் நிறுவனங்கள் செயல்பட, செயல்பட்டால் இரட்டிப்பு சம்பளம் வழங்க, தொழிலாளர் நலத்துறை உத்தரவு வழங்கியுள்ளது.அறிவுறுத்தல்களின் படி நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில், 77 நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை) சட்டம் மற்றும் விதிகளைமீறி, செயல்பட்டது தெரிய வந்துள்ளது.இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ