உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம சபாவில் வலியுறுத்தல்

கிராம சபாவில் வலியுறுத்தல்

திருப்பூர் : கணியாம்பூண்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ் முன்வைத்த கோரிக்கை:நுாறு நாள் பணியாளர்களுக்கு, வருகை பதிவேடு கருவி வைக்க வேண்டும். சமுதாய நலக்கூடம் அமைக்க, எம்.பி., ராஜா அனுமதி வழங்கியும், அதற்கான பணிகள் எதுவும் துவங்கவில்லை. சிறிய மழை பெய்தாலே பிரதான சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது; இதனால், நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது.முருகம்பாளையம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது. நீண்ட காலம் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ