உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு

கண்காணிப்பு கேமரா அமைக்க எதிர்பார்ப்பு

உடுமலை:உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், திருவனந்தபுரம் - மதுரை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.தினமும் நுாற்றுக்கணக்கான பயணியர் முன்பதிவு செய்யவும், ரயில்களில் பயணம் செய்யவும் இங்கு வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை தடுக்கவும் அங்கு கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி