உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர்;திருப்பூர் அரசு கலைக்கல்லுரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரி வளாகத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் ரசூல் அலி, தலைமை வகித்தார். அரசாணை, 56ன் படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; இதுதொடர்பாக, 2019ல் இருந்து, மாதம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கணக்கிட்டு, அரியர் மற்றும் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். ---ஆர்ப்பாட்டம் நடத்திய கவுரவ விரிவுரையாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ