உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷனில் தே.எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தல்

ரேஷனில் தே.எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்தல்

உடுமலை : ரேஷன்கடைகளில் தேங்காய் எண்ணெய் அரசு வினியோகிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வலியுறுத்துகிறோம்.இன்று அனைத்து குடும்பங்களிலும் தேங்காய் எண்ணெய் அவசியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசே ரேஷன் கடை வாயிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்கும் போது, பொதுமக்கள் சந்தோஷத்துடன் அதை வாங்கிச்செல்வர்.முதல் கட்டமாக மூன்று மாவட்டங்களில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு லிட்டர் வீதம் ரேஷன் கடைகளில் தமிழக அரசு வினியோகிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி