கால்வாய் அடைப்புதிருப்பூர், எஸ்.வி., காலனி கிழக்கு, நான்காவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- முத்துவேல், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)திருப்பூர், 33வது வார்டு, பாரப்பாளையம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.- இனியா, பாரப்பாளையம். (படம் உண்டு)லாரி வர இயலாதுதிருப்பூர், 24வது வார்டு, ரஜினிகாந்த் திருமண மண்டபம் கிழக்கு வீதி, ரேஷன் கடை அருகே, பைப் பதிக்க குழி தோண்டி, 15 நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைக்கு பொருட்களுடன் லாரி வர வழியில்லை.- ரவிக்குமார், சாமுண்டிபுரம். (படம் உண்டு)குப்பைத்தொட்டி இடையூறுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கே.எஸ்., தியேட்டர், ஐஸ்வர்யா காலனியில் ஒருபுறம் மின்கம்பம், மறுபுறம் குப்பை தொட்டி இடையூறாக உள்ளது.- சந்திரன், ஐஸ்வர்யா காலனி. (படம் உண்டு)வீணாகும் தண்ணீர்திருப்பூர், கருவம்பாளையம், நாதன் மில் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- ஆனந்தராஜ், கருவம்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், கணியாம்பூண்டி - ராக்கியபாளையம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- குமார், கணியாம்பூண்டி. (படம் உண்டு)திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனி, விநாயகர் கோவில் அருகே குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகிறது.- சங்கரராமன், சூர்யா காலனி. (படம் உண்டு)எரியாத விளக்குதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு - பண்டிட் நகர் பள்ளி செல்லும் வழியில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- ஜெயந்தி, பண்டிட் நகர். (படம் உண்டு)அரைகுறை பணிதிருப்பூர், ஆறாவது வார்டு, நல்லாத்துப்பாளையத்தில் கான்கிரீட் ரோடு போட்டுள்ளனர். பாதாள சாக்கடை மூடி மேலே இல்லை; குழியாக உள்ளது. முழுமையாக பணி முடிக்காமல், அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர்.- உதயகுமார், நல்லாத்துப்பாளையம். (படம் உண்டு)ரியாக் ஷன்கால்வாய் சுத்தமானதுதிருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் ஸ்டாப், பி.கே.ஆர்., காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறியது. 'தினமலர்' நாளிதழ் செய்தியால், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.- சம்பத், பி.கே.ஆர்., காலனி. (படம் உண்டு)விளக்கு எரிகிறதுதிருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., டிப்போ ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு விட்டது.- ஆனந்தராஜா, காங்கயம் ரோடு. (படம் உண்டு)சாலை சீரமைப்புதிருப்பூர், சந்திராபுரம், ராஜிவ் காந்தி நகரில் சாலை குழியாக இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. 'பேட்ஜ்ஒர்க்' செய்து, சாலையை சீரமைத்துள்ளனர்.- ராமராஜ், சந்திராபுரம். (படம் உண்டு)