உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அச்சம்

உடுமலை:உடுமலையில், குடியிருப்பு பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதோடு, பொதுமக்களை கடிப்பதால் அச்சமடைந்துள்ளனர்.உடுமலை, தளி ரோடு ரயில்வே மேம்பாலம், பாலாஜி நகர் சுற்றுப்பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. இவை, ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகள், பொதுமக்களை விரட்டிச்சென்று கடிக்கின்றன. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி, விபத்துக்களை ஏற்படுத்துவதால், மக்கள் பாதிக்கின்றனர். எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ