உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகராட்சி சிறப்பு நிதியில் புதுப்பிக்கப்படும் குளம்

நகராட்சி சிறப்பு நிதியில் புதுப்பிக்கப்படும் குளம்

உடுமலை : உடுமலை வெஞ்சமடை குளம், நகராட்சி சார்பில் சிறப்பு நிதியின் கீழ், புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.உடுமலை பழநி ரோடு வெஞ்சமடை பகுதியில், பி.ஏ.பி., கால்வாய் அருகே, குளம் உள்ளது. பராமரிப்பு இல்லாமல், கழிவு நீர் தேங்கியும், புதர் மண்டியும், அடையாளத்தை இழந்து காணப்பட்டது.இதனை, நீர் நிலைகள் மீட்கும் திட்டத்தின் கீழ், உடுமலை நகராட்சி சார்பில், 35 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.குளத்தை சுற்றிலும், கான்கிரீட் மற்றும் கருங்கற்கள் அடுக்கி கரை அமைத்து, பூங்கா, நடை பாதை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் வீணாக இருந்த குளம், தற்போது புதுப்பிக்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ