உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு

அக்கம்மாள் கோவில் கும்பாபிேஷகம் :திரளான பக்தர்கள் சுவாமி வழிபாடு

உடுமலை:உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி வேலுார் கிராமத்தில், ஸ்ரீ சித்தவநாயுடு - ஸ்ரீ கோணம்மாள், ஸ்ரீ நாரப்பநாயுடு - ஸ்ரீ சித்தம்மாள், ஸ்ரீ அக்கம்மாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷ விழா கடந்த 20ம் தேதி துவங்கியது.முதல் நாள் மாலையில், கோவிலில் தேவதா அனுக்ஞை, மகாசங்கல்பம், வாஸ்துசாந்தி, கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 6:00 மணிக்கு மேல் முதற்கால ேஹாமம், தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு வேதபாராயணம், யாகசாலை திருவாதாரன பூஜைகளும், இரண்டாம் காலை ேஹாமம், தீபாராதனையும், மாலை, 4:00 மணிக்கு மூன்றாம் கால ேஹாமமும் நடந்தன.இரவு எண்வகை மருந்து சாற்றுதல் வழிபாடு நடந்தது. நேற்று காலை, 7:45 மணிக்கு நான்காம் கால ேஹாமமும், காலை, 9:30 மணிக்கு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா கும்பாபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம், அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. கும்பாபிேஷகத்தில் மேலகோட்டை ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் பங்கேற்றார். மண்டல பூஜைகள் இன்று முதல் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !