உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு

அங்கன்வாடி மைய கட்டடம் ரூ.5.5 லட்சத்தில் புதுப்பிப்பு

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு போயம் பாளையம், அவிநாசி நகரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம், போதிய பராமரிப்பின்றி பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது. அதனை பராமரிப்பு மேற்கொள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக, மாநகராட்சி சார்பில், 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திறப்பு விழா நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் கவிதா, திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ