உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்: கிலோ ரூ. 71க்கு விற்பனை

 விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்: கிலோ ரூ. 71க்கு விற்பனை

உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 1,532 கிலோ எடையுள்ள, 3,502 தேங்காய்களை, 19 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 5 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ.71க்கும், குறைந்த பட்சமாக, ரூ.56 என சராசரியாக, ரூ.62க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 91 ஆயிரத்து, 182. அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 13 விவசாயிகள், 13 மூட்டை அளவுள்ள, 350.250 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், 5 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.212.69க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.175.69 என, சராசரியாக, ரூ.190க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 70 ஆயிரத்து, 784 என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை