உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

இலக்கிய மன்ற விழா: மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

உடுமலை:பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது.உடுமலை அருகே பூளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் விழா மற்றும் இலக்கிய மன்ற விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ஷீலாபாத்திமா தலைமை வகித்தார்.தமிழாசிரியர் மங்கலவிநாயகி வரவேற்றார். 'தமிழும் தொண்மையும்' என்ற தலைப்பில் பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன் பேசினார்.தமிழ் இலக்கிய மன்ற தலைவி மாணவி சுகுணா நன்றி தெரிவித்தார். தமிழ் இலக்கியங்கள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ