உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

திருப்பூர்;திருப்பூர் மது விலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முன்புறம் சோதனை நடத்தினர்.அப்போது வெளியே வந்த இருவரிடம் சோதனை செய்ததில், 8.75 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், விருதுநகரைச் சேர்ந்த பழனிவேல், 24, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்கண்ணா, 33 என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா மூட்டைகளைபறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ