உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கணவன் கண்முன் மனைவி பலி

கணவன் கண்முன் மனைவி பலி

திருப்பூர்;திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்தவர் சுரேஷ், 48. இவரது மனைவி அன்னலட்சுமி, 44. நேற்று காலை தம்பதி, புதிய பஸ் ஸ்டாண்டை நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது, கோபியில் இருந்து வந்த அரசு பஸ், டூவீலர் மீது உரசியது. அதில், டூவீலருடன் கீழே விழும் போது, பின்னால் அமர்ந்திருந்த மனைவி அன்னலட்சுமி மீது பஸ் மோதியது. படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை