உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவண்ணாமலை / அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்திராயண புண்ணியகால கொடியேற்றம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் நிகழ்வான மார்கழி மாதத்தில், உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மேளதாளம் முழங்க, தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அப்போது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயர தங்க கொடிமரத்தில், கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் காலை, இரவு சுவாமி மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவின், 10ம் நாளில், தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்