மேலும் செய்திகள்
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
ஆரணி:ஆரணி அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் சிக்கன் கடை வைத்துள்ளார். இவரின் மனைவி சித்ரா, 36; தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஏழுமலை அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். சுவற்றுக்கு சித்ரா தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். நேற்று வழக்கம்போல் சுவர் மீது ஏறி நின்று, தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பியில் நீர் பட்டு, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Oct-2025
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025