உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் பலி

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இருவர் பலி

திருச்சி:லால்குடி அருகே, கொள்ளிடம் ஆற்றில் சிறுவனும் அவரது சித்தப்பாவும் நீரில் மூழ்கி பலியாகினர்.திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, தண்டாங்கோரை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 26. அவரது அண்ணன் ரமேஷ், 30. ரமேஷின் 8 வயது மகன் ரிதன். நேற்று மாலை மோகன், அவரது அண்ணன் மகன் ரிதனை அழைத்துக் கொண்டு, கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், கொள்ளிடம் ஆற்றில் மூழ்கியவர்களை சடலமாக மீட்டனர்.லால்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் இப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை