உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / மரவள்ளியில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

மரவள்ளியில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, நரிப்பள்ளி, வேட்ரப்பட்டி, கீழ்மொரப்பூர், எம்.வெளாம்பட்டி, செட்ரப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், 30,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மரவள்ளியில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளியில் தாய்லாந்து வெள்ளை, தாய்லாந்து கருப்பு, முள்ளுவாடி, ரோஸ் உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, 6 மாதங்கள் வயதுடைய மரவள்ளிக்கிழங்கு செடியில் செம்பேன் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இலைகள் பழுத்து உதிர்வதால், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளது. ஒவ்வொரு பூச்சி மருந்து கடையிலும் வெவ்வேறு விதமான மருந்துகளை வழங்குகின்றனர். இதுவரை, 2 மற்றும், 3 முறை பூச்சி மருந்து அடித்தும் நோய் தாக்குதல் குறையவில்லை. எனவே, நோயை கட்டுப்படுத்த வேளாண் துறை மூலம் ஆலோசனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ArGu
ஜூலை 02, 2024 15:15

தமிழக அரசு ஆலோசனை வழங்கிவிட்டதாக கேள்வி... டாஸ்மாகில் தினம் ஒரு கோட்டர் வீதம் ஆறு மாதத்திற்கு அருந்தி வாருங்கள் அவ்வாறு அருந்தி வந்தால் செம்பேன் பற்றிய பயம் இருக்காது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை