உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தோல் கழிவுநீர் கலப்பால் கொட்டாற்றில் துர்நாற்றம்

தோல் கழிவுநீர் கலப்பால் கொட்டாற்றில் துர்நாற்றம்

வேலுார்:வேலுார் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில், சில நாட்களாக கடும் வெப்பம் வீசி வந்த நிலையில், நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அதனால், அப்பகுதியில் உள்ள கொட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதை சாதகமாக பயன்படுத்திய தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் அப்படியே கொட்டாற்றில் திறந்து விட்டனர்.இது ஆற்றில் ஓடிய மழைநீருடன் சேர்ந்து, துர்நாற்றத்துடன் நுரையுடன் ஓடியது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை